Friday 27 February 2015

எச்சரிக்கை : கண்டிப்பாக வயதுக்கு வந்த ஆண்களுக்கு மட்டும்


புத்தகம் : போக யோகம். ஆசிரியரே இது ஆண்களுக்கு மட்டும்தான் என்று எழுதியிருக்கிறார்.

போகம் என்றால் பலருக்கு முதலில் செக்ஸ்தான் நினைவுக்கு வரும்.  ஆனால் இதில் எல்லா போகங்களைப்பற்றியும்  எழுதப்பட்டுள்ளது. 
உடலுக்கு உணவு கொடுக்கிறோம். அது போல உயிருக்கு கொடுக்கும் உணவுதான் போகம். அதையே ஒரு யோகமாக செய்யச் சொல்கிற புத்தகம்.

ஒஷோ சொன்னதைத்தான் இவரும் சொல்கிறார், ஆனால் சைவத்தை துணைக்கு வைத்துகொண்டு சொல்கிறார்.

அன்பில்லாமல் கூடுவது நோய் என்கிறார்.



புத்தகத்திலிருந்து சில வரிகள் :

விந்து விட்டவன் நொந்து கெட்டான்
விந்தே விடாதவன் வெந்து கெட்டான்     என்பார்கள்.

விந்து வெளியேற்றம் என்பது வேறு. விந்து விடுவது என்பது வேறு. மூடி இல்லாத ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தால் பாட்டில் நிரம்பி வழியுமே அதுபோல விந்தை வெளியேற்றினால் அது விந்து வெளியேற்றுவது ஆகும். இது ஆரோக்கியமான செக்ஸ்.

"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அஃதின்பம்
கூடி முயங்கப் பெறின்"           என்பது நம் பாட்டன் மொழி.

கிறக்கம், மயக்கம் , முயக்கம் என்று தமிழில் மூன்று நிலைகள் உண்டு. நீண்ட நேரம் செக்ஸில் இயங்கி ஈடுபட்டு நாம் முயங்க வேண்டும், இல்லையேல் மயங்க வேண்டும். ஒரு போதும் கிறங்கக் கூடாது.

முயக்க நிலையில் செக்ஸ் இயக்கத்திற்கு பிறகு புத்துணர்வோடு இருப்போம். மயக்க நிலையில் புத்துணர்வோடு சோர்வும் கலந்த நிலையில் இருப்போம். கிறக்க நிலையில் செயலற்ற தன்மையில் இழக்கக்கூடாத ஒன்றை இழந்தது போல துவண்டு கிடப்போம்.

கிரக்க நிலைதான் விந்து விடுவது. இதனால் நொந்து கெடுவான்.

முயக்க நிலை என்பது என்பது விந்தை வெளியேற்றுவது...

இளைய தலைமுறை சிக்கிக்கடக்கும் பல விஷயங்களை எளிய முறையில் தாண்ட இந்தப்புத்தகம் உதவும். எல்லையில்லாமல் இணையத்தில் கொட்டிக்கிடக்கிற வெறி பிடிக்க வைக்கிற செக்ஸ் வீடியோக்களை  பார்கிற  இளைய தலைமுறைக்கு  இந்தப்புத்தகம் அவசியம் என்றே தோன்றுகிறது.

கதை விடற மாதிரி இருக்கே என்று சந்தேகப்படும் மொழி நடைதான் புத்தகத்தில் உள்ள பிரச்சனை.  சேலம் தாத்தா திட்டாமல் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. ஆனால் எதைச் சொல்லியும் பயமுறுத்தவில்லை.

குறி மேலாண்மை , குறியோகா என்றெல்லாம் தலைப்பிட்டு அதிரடிக்கிறார் ஆசிரியர்.


செக்ஸை பற்றி பேசுவதே பாவம் என்றும் இழிவானது என்றும் கருதும் சமூகத்தில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெளிய வாய்ப்பில்லை.  அப்படிப்பட்ட சூழலில் இந்தப்புத்தகம் எளிய ஒரு உதவி.


தேன் புட்டிக்குள் செல்லும் ஈயானது அந்த புட்டிக்குள் விழுந்து செத்துவிடாமல் பாதுகாப்பாக தேன் பருகி வரவேண்டும். அப்படி பாதுகாப்பாக தேன் பருகும் வித்தையை கற்றுத்தருவதே போக நெறி என்று அறிமுகப்படுத்தும் ஆசிரியர். அதை இந்த நூலின் மூலம் கற்றுத்தருகிறார்.



No comments:

Post a Comment