பாலின் நிறம் கருப்பு : இந்தப்புத்தகத்தை
படித்ததும் இப்படித்தான் சொல்வீர்கள்
ஆரோக்கியத்தின்
பெயரில், பெரிய அளவில் நடக்கிற வணிக கொள்ளையைப் பற்றிய மிகச் சிறிய புத்தகம், 'பால் ஒரு உயிர்கொல்லி.'
பாலை
செரிமானம் செய்வதற்கான சக்தியை உடல் நான்கு வயதிற்கு பின் இழந்துவிடுகிறது.
வெள்ளை
அணுக்கள், உரங்கள், கிருமிகள், நச்சுக்களின் கலப்படமே பால்.
பசுவின்
பால் ஏற்படுத்தும் அமிலத்தன்மை கோலா பானங்கள் ஏற்படுத்துவதை விட அதிகம் என புத்தகம்
முழுவதும் அதிர்ச்சி தகவல்கள் நிரம்பியிருக்கிறது
பால்
ஏற்படுத்தும் நோய்கள் பற்றிய உலக அளவிலான ஆராய்ச்சிகளை பட்டியலிடுகிறது. நோய்களின்
பட்டியலை படித்தாலே சூடு பட்ட பூனையாவீர்கள்.
வளர்ந்து
வருகிற கன்றுக்குட்டியிடம் பால் தருகிறேன் என்றால், ‘’மிக்க நன்றி. எனக்கு சாப்பிட
புற்கள் இருக்கின்றன’’ என்றே கூறும் என்று எழுதப்பட்டுள்ள இடம் சுவையாக இருக்கிறது.
மொத்த புத்தகத்தையும் இப்படி எழுத முடிந்தால் இன்னும் அதிகம் பேரைச் சென்றடையும்.
அடுத்த
பதிப்பில் முயற்சிக்கவும்.
பால்
பண்ணை மாடுகளுக்கு நேரும் அவலத்தை சொல்லும்போது புரிகிறது வணிகத்தில் கருணை கிடையாது.
வாடிக்கையாளர்களிடம் கூட.
பத்து
நிமிடத்தில் படித்துவிடலாம். ஆனால் பால் பயன்படுத்தும் பழக்கத்தை விட்டுவிட?
சரியாக
உள் வாங்கியிருந்தீர்கள் என்றால் ஒரு நொடியில் விட்டுவிடலாம்.
சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்கிறவர்கள் மறக்காமல் இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். கொஞ்சம் ஆரோக்கியமும் ஆயுளும் கூடும்.
அவசியமான, நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி...
ReplyDeleteஅவசியம் வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே
ReplyDeleteநன்றி